மதுரையில் மக்களுக்கு இடையூறாக இருந்த 500 விளம்பரப் பலகைகள் அதிரடி நீக்கம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக வைக்கப் பட்டிருந்த 500 விளம்பரப் பலகைகள் அதிரடியாக மாநகராட்சியால் நீக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்த போதிலும், அதை மதிக்காமல், தொடர்ந்து விளம்பரப்பலகைகள் வைத்து போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து இடையூறாக பல விளம்பரப் பலகைகள் மதுரையில் இருந்தன.
நேற்று அதிரடியாக, களத்தில் இறங்கிய மதுரை மாநகராட்சி கமிஷனர் நந்தகோபாலன், உதவி ஆணையர் தேவதாஸ் தலைமையில் விதி மீறலாக இருந்த 500 விளம்பரப் பலகைகள் நீக்கப்பட்டன.
அகற்றப்பட்ட விளம்பரப் பலகையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்சிதம்பரத்திற்கு உரிமையான வணிக வளாக விளம்பரப் பலகையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications