For Daily Alerts
Just In
சென்னை விமான நிலையத்தில் 10 கிலோ தங்கம் கடத்தல்: 5 பேர் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்னை விமானநிலையத்தில தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை சோதனை செய்த சுங்கத்துறையினர் அவர்களிடம் இருந்து 10 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்களை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் இரண்டு கோடி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Comments
English summary
Customs officials on Thursday arrested 5 person from Chenna Meenampakkam International Airport with 10 kgs of gold worth around Rs 2 crore.