பர்வேஸ் முஷாரப் மீதான தேசதுரோக வழக்கை தொடர்ந்து நடத்த நவாஸ் ஷெரீப் அரசு முடிவு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது தேசத் துரோக வழக்கைத் தொடர்ந்து நடத்த நவாஸ் ஷெரீப் அரசு முடிவு செய்துள்ளது.
பர்வேஸ் முஷாரப் மீது பெனாசிர் கொலை வழக்கு, பலுசிஸ்தான் தேசியவாத தலைவர் அக்பர் புக்தி கொலை வழக்கு உள்ளிட்ட 3 வழக்கு தொடரப்பட்டு அவரை கைது செய்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம் செய்ததால் பர்வேஸ் முஷாரப் மீது தேசதுரோக வழக்கும் தொடரப்பட்டது. அதில் ஆஜரான அரசு வழக்கறிஞர் தேர்தலுக்கு பின் வரும் புதிய அரசு இதுபற்றி முடிவு செய்யும் என கூறியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை வரும் 24-ந்தேதி நடைபெற இருக்கிறது.
இதனால் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை புதிய அரசு வழக்கறிஞர் மாலிக் சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். முஷாரப் மீதான தேசதுரோக வழக்கை தொடர்ந்து நடத்துவது என்று இச்சந்திப்பில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் வரலாற்றில் தேசதுரோக வழக்கை சந்திக்கும் முதல் ராணுவ ஆட்சியாளர் முஷாரப்.












Click it and Unblock the Notifications