ஒருதலைக் காதல்... பெல்ட்டில் தூக்குப் போட்டுக் கொண்டு பிளஸ்டூ மாணவன் தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

கோவை: தன்னை விட வயதில் மூத்த கல்லூரி மாணவியை ஒரு தலையாக காதலித்த பிளஸ்டூ மாணவன், மாணவி தனது காதலை ஏற்காததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை, சாயிபாபாகாலனி, கே.கே., புதூர், ஆனந்தா ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஹரிஹரன்; இவரது மகன் மனோஜ்குமார். 16 வயதான இவர் பிளஸ்டூ படித்து வந்தார்.

இவர் டியூஷனுக்கும் போய் வந்தார். அப்போது அங்கு இவருடன் படித்த இவரை விட ஒரு வயது மூத்தவரான மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்தார் மனோஜ்குமார். அந்த மாணவி தற்போது கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். மனோஜின் காதலை அந்த மாணவி தொடர்ந்து ஏற்க மறுத்து வந்தார்.

இருப்பினும் விடாமல் எஸ்.எம்.எஸ். அனுப்புவது என்று இருந்துள்ளார் மனோஜ் குமார். இதனால் மாணவி தனது பெற்றோரிடம் சொல்ல அவர்கள், தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்து விட்டனர். தலைமை ஆசிரியர், மாணவரை அழைத்துக் கண்டித்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த மாணவன் தனது பெல்ட்டை எடுத்து அதில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+