இது எங்களின் மறுபிறவி... தமிழகம் திரும்பிய பக்தர்கள் கண்ணீர் பேட்டி
சென்னை: உத்தரகண்ட் மாநில வெள்ளத்தில் சிக்கி மீண்டு வந்தது எங்களின் மறுபிறவி என்று சென்னை திரும்பிய பக்தர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
இமாலய சுனாமி என்று வர்ணிக்கப்படும் வெள்ளத்திற்கு உத்தகண்ட் மாநிலத்தில் உள்ள புனித தலங்களாக கேதார்நாத், பத்ரிநாத், ரிஷிகேஷ் ஆகிய இடங்கள் சிதைந்து போயுள்ளன. இங்கு புனிய யாத்திரை சென்ற பக்தர்கள் ஆங்காங்கே சிக்கித் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து யாத்திரை சென்ற பக்தர்கள் படிப்படியாக மீட்கப்பட்டு டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். உத்தரகாண்ட் சென்றுள்ள தமிழக சிறப்புக் குழு, வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று 103 பேர் திரும்பிய நிலையில் டெல்லி வந்தவர்களில் 3வது நாளாக 74 பேர் இன்று விமானம் மூலம் சென்னை திரும்பினர். விமானநிலையம் வந்த பக்தர்களை அவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பக்தர்கள் தங்களை பத்திரமாக மீட்ட தமிழக அரசுக்கு நன்றி கூறினர். கேதார்நாத்தில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பும் வழியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக அவர்கள் கூறினர். சொந்த ஊருக்கு திரும்புவோமா? என்று நினைத்த நேரத்தில் எப்படியோ மீண்டு வந்துள்ளோம் இது எங்களின் மறுபிறவி என்று அவர்கள் கூறினர்.
விழுப்புரம் பக்தர்கள்
இதனிடையே விழுப்புரத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்ற 37 பேரில், ஒரு பெண் உட்பட 2 பேர் உத்தர்காண்டின் மழை வெள்ளத்துக்கு பலியாகிவிட்டனர்.
இறந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த தகவல் தொலை பேசி வாயிலாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மீதமுள்ளவர்களில் 20 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வந்தடைந்தாலும் அவர்களில், 19 பேர் மட்டுமே டெல்லிக்கு வந்து சேர்ந்துள்ளனர். தப்பிய 20 பேரில் ஒருவரான குருமூர்த்தி என்பவர், வெள்ளப் பகுதியில் சிக்கித் தவிக்கும் 15 பேரில் தனது மனைவியும் ஒருவர் என்பதால், அவர் உத்தர்காண்டிலேயே தங்கியிருப்பதாக டெல்லி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்டில் இன்னும் 30 ஆயிரம் பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் தமிழர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது தெரியவில்லை.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications