பாகிஸ்தானில் பயங்கரம்.. 9 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொலை
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் 9 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை துப்பாக்கியுடன் சூழ்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் வந்திருந்த கைடும் சுட்டுக் கொல்லப்ப்டடார்.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஐந்து பேர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள். 3 பேர் சீனர்கள். ஒருவர் ரஷியர். கைடு, பாகிஸ்தானைச் சேர்ந்தவர். நங்கா பர்பத் என்ற பாகிஸ்தானின் உயரமான மலைப் பகுதி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் முக்கிய சுற்றுலாத் தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மலைப் பகுதியில் டிரெக்கிங் போவதில் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆர்வம் காட்டுவார்கள். சம்பவத்தின்போது சுற்றுலாப் பயணிகள் டிரெக்கிங்கில் ஈடுபட்டிருந்தபோது திடீரென சூழ்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டதில் சம்பவ இடத்திலேயே 10 பேரும் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜுன்துல்லா என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications