ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: பொதுவாக பெரிய அல்லது முக்கிய தலைவர்கள் வருகையின் போது காஷ்மீரில் தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபடுவது வழக்கமே. அதுபோலவே, இன்று காஷ்மீருக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தது.

நேற்று ஸ்ரீநகர் அருகே ராணுவ வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது, அதனைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இரண்டு தீவிரவாதிகள் நடத்திய இத்தாக்குதலில் 8 ராணுவத்ஹ்டினர் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு, நடத்தப்பட்ட இந்ததாக்குதலுக்காக கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர், இதனால் அஞ்சி பயணத்தை ரத்து செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளார். இத்தாக்குதலுக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் பொறுப்பு ஏற்றிருக்கிறது.

ஆனாலும், இத்தாக்குதலின் பிண்ணனியில் பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளின் சதி இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளது புலனாய்வு துறை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+