பா.ம.க பொதுக் கூட்டத்துக்கு மீண்டும் ஹைகோர்ட் அனுமதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் பொதுக் கூட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் அனுமதி மறுத்துள்ளது.
சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் பொதுக் கூட்டம் நடத்த பா.ம.க.வுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, பா.ம.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பா.ம.க.வின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, பா.ம.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், பா.ம.க அளித்த உத்தரவாதம் மாமல்லபுரம் கூட்டத்தில் பின்பற்றப்படவில்லை என்றும் தற்போதைய சூழ்நிலையில் அனுமதி தர இயலாது என்றும் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 15ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications