ராஜ்யசபா தேர்தல்: திமுக எம்.எல்.ஏக்களுடன் கருணாநிதி ஆலோசனை
சென்னை: ராஜ்யசபா தேர்தல் குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று அக் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது.
இதில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர்கள் துரை முருகன், வி.பி.துரைசாமி, நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ராஜ்யசபா எம்பி வேட்பாளர் கனிமொழி, அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், கல்யாண சுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் 27ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளர்கள் வாக்களிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டன.
மேலும் கனிமொழியின் வெற்றி வாய்ப்பு, காங்கிரஸ் கட்சியின் ஆதரவு யாருக்குக் கிடைக்கும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் ஆதரவு தேமுதிகவுக்கு கிடைத்துவிட்டால் கனிமொழியின் வெற்றி வாய்ப்பு சிக்கலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், எப்படியும் காங்கிரசின் ஆதரவு தங்களுக்குக்கே கிடைக்கும் என திமுக இன்னும் நம்பிக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications