ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை, சிஐஏ அலுவலகம் மீது தாலிபான்கள் தாக்குதல்
காபூல்: ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தாலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
தாலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முன்வந்ததற்கு ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு காபூலில் உள்ள அதிபர் மாளிகையின் கிழக்கு வாசலை தாலிபான் தீவிரவாதிகள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் கர்சாயின் மெய்காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.
பலத்த பாதுகாப்பு உள்ள அதிபர் மாளிகை பகுதியில் சுமார் 1 மணிநேரம் துப்பாக்குச்சூடும், தொடர் குண்டுவெடிப்பு சப்தங்களும் கேட்டுள்ளன. இந்நிலையில் இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக தீவிரவாதிகள் சிஐஏ அலுவலகத்தையும் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், "இன்று காலை 6.30 மணிக்கு தியாகிகள் சிலர் அதிபர் மாளிகை, பாதுகாப்பு அமைச்சம் மற்றும் ஏரியானா ஹோட்டல் ஆகியவற்றை தாக்கினர்" என்று தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.
இந்த தாக்குதல் நடந்தபோது கர்சாய் மாளிகையில் இருந்தாரா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications