முசிறி அருகே கணவன், மகன்களை விட்டுவிட்டு கள்ளக்காதலுடன் ஓடிய பெண் மர்ம சாவு
திருச்சி: முசிறி அருகே கணவன், 2 மகன்களை விட்டுவிட்டு கள்ளக்காதலுடன் ஓடிய இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சூரம்பட்டியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி(37). திருச்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார். அவருக்கும் துறையூரை அடுத்துள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகள் கீதாவுக்கும்(27) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு சரவணன் (7), சபரி (5) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
மாமியாருடன் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து கீதா சூரம்பட்டியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து மகன்களுடன் தங்கினார். திருச்சியில் தங்கி வேலை பார்க்கும் மூர்த்தி மாதம் ஒரு முறை ஊருக்கு வந்து மனைவி, மகன்களை பார்த்து சென்றுள்ளார். இந்நிலையில் கீதாவுக்கும் காங்கேயம் ஓலப்பாளையத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்த் (41) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 1 ஆண்டு காலமாக கள்ளக்காதல் விவகாரம் நடந்துள்ளது. இது குறித்து அறிந்த மூர்த்தி கீதாவை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை கீதா வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டு கள்ளக்காதலுடன் தும்பலம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள முள்காட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து ஆனந்த் அவருக்கு தாலி கட்டியுள்ளார். அங்கிருந்து இருவரும் ஊரை விட்டு ஓட திட்டமிட்டனர். அப்படி இருக்கையில் திடீர் என்று ஆனந்த் மட்டும் தலையில் அடித்துக் கொண்டும், அழுதும் கொண்டும் முள்காட்டில் இருந்து ஓடி வந்துள்ளார். அப்போது கோவில் அருகே நின்றிருந்தவர்கள் முள்காட்டுக்குள் சென்று பார்த்தபோது கீதா வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்தார். உடனே 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வந்து பார்த்துவிட்டு கீதா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட ஆனந்த் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க முயன்றார். பொது மக்கள் அவரைப் பிடித்து முசிறி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே கீதா இறந்தது பற்றி அறிந்து அவரது உறவினர்கள் வந்து உடலை சூரம்பட்டிக்கு எடுத்துச் சென்றனர்.
இறுதி ஊர்வலம் புறப்படும் முன்பு அங்கு சென்ற முசிறி போலீசார் கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனந்திடம் விசாரித்ததில், அவர் திருச்சி நவல்பட்டு பர்மா காலனியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் என்பதும், அவருக்கு ரேவதி என்ற மனைவியும், 2 குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications