மதுரையில் திருமண ஆசை காட்டி பெண் ஊழியரை கற்பழித்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் திருமண ஆசை காட்டி பெண் ஊழியரை சீரழித்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
மதுரை அனுப்பானடி பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(32). அவர் அப்பகுதியில் ஒரு நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். அவரது நிறுவனத்தில் சுமதி(21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வேலை செய்து வந்தார். மணிகண்டன் சுமதிக்கு திருமண ஆசை காட்டி அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.
இதில் சுமதி கர்ப்பமானார். இதையடுத்து அவர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மணிகண்டனை வற்புறுத்தினார். ஆனால் மணிகண்டனோ திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மேலும் சுமதியை வேலையை விட்டு நீக்கினார்.
இதையடுத்து சுமதி நடந்தது பற்றி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications