ராஜ்யசபா தேர்தலில் காங். ஆதரவு.. சத்தியமூர்த்தி பவனுக்கு போய் நன்றி சொன்ன கனிமொழி!
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தம்மை ஆதரிப்பதாக அறிவித்தற்காக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார் கனிமொழி.
நாளை நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் 6வது எம்.பி. இடத்துக்கு திமுக- தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இரு கட்சிகளுமே காங்கிரஸின் ஆதரவைக் கோரி இருந்த போதும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரிப்பதாக அக்கட்சி நேற்று அறிவித்தது.

இதைத் தொடர்ந்து இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவன் சென்ற கனிமொழி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகனை நேரில் சந்தித்து ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். அப்போது கனிமொழியுடன் திமுக எம்பிக்கள் சிலரும் உடன் சென்றிருந்தனர்.
ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி: சோனியாவிற்கு கருணாநிதி கடிதம்:
இந் நிலையில் ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications