டெல்லி அருகே ஓடும் காரில் 2 பெண்கள் பலாத்காரம்!
டெல்லி: டெல்லி அருகே குர்கானில் ஓடும் காரில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் அருகே உள்ள செயற்கைக்கோள் நகரமான குர்கானில் ஒருமணி நேர இடைவெளியில் ஓடும் காரில் இரண்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் புதன்கிழமையன்று மெக்ரோலி - குர்கான் சாலையில் இருந்த விடுதி ஒன்றின் வாசலின் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களின் அருகில் வந்த காரில் டெல்லிக்கு செல்வதற்கு லிப்ட் கேட்டு ஏறியுள்ளனர். காரில் இருந்த டிரைவர் அந்த பெண்களை ஏற்றிக் கொண்டார்.
காரினுள் ஏற்கனவே இரண்டு ஆண்கள் இருந்தனர். அப்போது கார் நகரத் தொடங்கியதும் அந்தப் பெண்களிடம் அவர்கள் சில்மிசம் செய்துள்ளனர். காரை நிறுத்துமாறு கூறியும், வேகமாக கார் சென்றுள்ளது. இதனால் அந்தப் பெண்கள் சத்தம் போட்டுள்ளனர்.
அப்போது அவர்களை அடித்து துன்புறுத்தியதோடு இரண்டு பெண்களையும் ஓடும் காரிலேயே பலாத்காரம் செய்துவிட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.
பெண்கள் இருவரும் இது குறித்து குர்கான் போலீசில் புகார் தெரிவித்தனர். மருத்துவப்பரிசோதனையில் அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மை என்பது தெரியவந்துள்ளது.
தப்பியோடிய மூவரையும் குர்கான் போலீசார் தேடிவருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இதன்பின்னர் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. டெல்லியில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் டெல்லி அருகிலேயே இரண்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பலத்த அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications