For Daily Alerts
Just In
முடிந்தது ராஜ்யசபா தேர்தல்! ஜெ. நாளை கொட நாடு பயணம்!
சென்னை: ராஜ்யசபா தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை கொடநாடு செல்ல இருக்கிறார்.
கடந்த ஒரு மாத காலமாக தமிழக அரசியலில் ராஜ்யசபா தேர்தல் வியூகங்கள் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்த களேபரங்கள் இன்றுடன் விடைபெறுகின்றன.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கொடநாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா நாளை செல்கிறார். அவர் அங்கு சில வாரங்கள் தங்க இருக்கிறார். அங்கு இருந்தபடியே அவர் அரசுப் பணிகளை மேற்கொள்வார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Tamil Nadu chief minister Jayalalithaa will leave for Kodanad in the Nilgiris hill district on Friday and would stay there for a few weeks. An official release on Thursday said she would look after her official work from there.
Story first published: Thursday, June 27, 2013, 11:40 [IST]