சைபர் கிரைம்: இந்தியாவில் 10ல் 7 இளைஞர்கள் பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் 10ல் 7 இளைஞர்கள் சைபர் கிரைம் மூலம் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகி தங்களின் வாழ்க்கையை தொலைக்கின்றனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 4.2 கோடி மில்லியன் பேர் சைபர் குற்றங்களினால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றினை இன்டர்நெட் செக்யூரிட்டி த்ரெட் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அதிகரிப்பிற்கு ஏற்ப அது தொடர்பான குற்றங்களும் அதிகரிக்கிறது. நாடு முழுவதும் 52 சதவிகிதம் பேர், ஏமாற்றப்படுதல், ஹேக்கிங், திருட்டு, வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட சைபர் குற்றங்களினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

இளைஞர்கள் பாதிப்பு
இந்தியாவில் 10ல் 7 இளைஞர்கள் சைபர் கிரைம் மூலம் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகி தங்களின் வாழ்க்கையை தொலைக்கின்றனர். மொபைல்போன் மூலமான திருட்டு 58 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இ.மெயில் ஐடி, பாஸ்வேர்ட் போன்றவைகளை ஹேக் செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது.

57 சதவிகிதம் அதிகரிப்பு
சைபர்' குற்றங்கள், முந்தைய ஆண்டை விட, கடந்தாண்டில், 57 சதவீதம் அதிகரித்து உள்ளன. "சைபர்' குற்றங்கள் தொடர்பான வழக்குகள், இந்திய தண்டனை சட்டம் (ஐ.பி.சி.,) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் கீழ் பதியப்படுகின்றன. இந்தியாவில் கடந்தாண்டில் மட்டும், 18 முதல், 30 வயதுக்குட்பட்ட, 1,100க்கும் மேற்பட்டவர்கள், சைபர் குற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications