மழை பொய்த்ததால் சென்னை ஏரிகள் வறண்டன.. குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டுவிட்டதையடுத்து மாற்று ஏற்பாடுகளில் தமிழக குடிநீர் வினியோகம் இறங்கியுள்ளது.
சென்னைக்கு பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது இந்த ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பு இல்லை. பருவமழை பெய்யாததால் அவை வறண்டுவிட்டன.
இந்த ஏரிகளில் தற்போது 15 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. ஆனால், சென்னைக்கு தினமும் 83 கோடி லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால், ஏரிகள் வறண்டுவிட்டதையடுத்து இப்போது 55 கோடி லிட்டரே வினியோகிக்கப்படுகிறது.
இந் நிலையில் நெய்வேலி, தாமரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதல் நீரை குடிநீர் வாரியம் சென்னைக்கு கொண்டு வந்து கொண்டுள்ளது. இது தவிர சென்னை நகரில் 626 போர்வெல்கள் தோண்டப்பட்டும் நீர் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 676 போர்வெல்கள் அமைகக்கவும் குடிநீர் வீரியம் திட்டமிட்டுள்ளது.
இது தவிர தினமும் 391 லாரிகள் நாள் ஒன்றுக்கு 3,700 நடைகள் மூலமும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
மழை சரியாக பெய்யாவிட்டால் இந்த ஆண்டு குடிநீர் பிரச்சனை பெரிய அளவில் உருவெடுக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications