4வது திருமணத்தை தடுத்த 3வது மனைவியை எரித்துக் கொன்ற கணவன்!
திருவாரூர்: நான்காவது திருமணத்தைத் தடுக்க முயன்ற மூன்றாவது மனைவியின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (34) ரியல் எஸ்டேட் தரகர் ஆவார்.
இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், ரோஜாபானு (25) என்பவரையும் சமீபத்தில் மூன்றாவதாக திருமணம் செய்து நாகப்பட்டினம் அருகே கூத்தூரில் வசித்து வந்தார்.
இந் நிலையில், மற்றொரு பெண்ணுடன் ராமச்சந்திரனுக்கு தொடர்பு ஏற்பட்டு, அவரை திருமணம் செய்ய முயற்சித்துள்ளார். இதை, ரோஜாபானு கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், ரோஜாபானுவின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி, தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றார்.
அக்கம் பக்கத்தினர் ரோஜாபானுவை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி ரோஜாபானு இறந்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ராமச்சந்திரனை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications