உத்தரகாண்ட்: உயிரை காப்பாற்ற ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சார்தாம் யாத்திரை சென்ற பக்தர்கள் ஹிமாலய சுனாமியில் சிக்கி தவித்தபோது அவர்களை மீட்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் ஹெலிகாப்டர் நிறுவன ஊழியர்கள் 3 லட்சம் ரூபாய் கேட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளனது.
உத்தரகண்ட் மாநில அரசு சார்பில் சாரதி ஏர்வேஸ் என்ற தனியார் ஹெலிகாப்டர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் மலையில் சிக்கித்தவித்த யாத்ரீகர்கள் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் யாத்ரீகர்கள் ஒவ்வொருவரிடமும் 3 லட்சம் ரூபாய் வரை தனியாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் இதனை கண்டறிந்துள்ளது.
இது அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தினை மீறிய செயல் என்று உத்தரகாண்ட் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த தனியார் ஹெலிகாப்டர் நிறுவனத்தின் தலைவர் குலாப் சிங் தன்வார், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் நெருங்கிய நண்பர் ஆவார்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற ரூ.3 லட்சம் வரை லஞ்சம் கேட்ட விவகாரம் நாடுமுழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 30 நபர்கள் ரூ.20 லட்சம் வரை இந்த ஹெலிகாப்டர் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
தனியாக கட்டணம் வசூலித்த ஹெலிகாப்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் அஜித் சிங், உத்தரகாண்ட் மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications