திமுக தலைவர் கருணாநிதி மகள், மருமகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

Selvi
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் செல்வியின் மருமகன் ஜோதிமணி ஆகியோர் மீதான 4 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த வி. நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இம்மனுவின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம், தாழாம்பூர் கிராமத்தில் உள்ள 2.94 ஏக்கர் நிலத்துக்கான பொது அதிகாரம் தன்னிடம் இருப்பதாகவும், அந்த நிலத்தை விற்பனை செய்ய உள்ளதாகவும் செல்வியின் மருமகனான வி.எம். ஜோதிமணி கடந்த 2007-ஆம் ஆண்டு தெரிவித்தார். அந்த நிலத்தை வாங்க விரும்பிய நான், அதற்காக ரூ.3 கோடியே 50 லட்சத்தை முன்பணமாக ஜோதிமணியிடம் அளித்தேன்.

ஆனால், அதன் பின் அந்த நிலத்தை எனக்கு விற்பனை செய்ய ஜோதிமணி முன்வரவில்லை. என்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை. மாறாக, அந்த நிலத்தை வேறொருவரிடம் அவர் விற்பனை செய்து விட்டார் என்பது எனக்கு பின்னர் தெரிய வந்தது. இது தொடர்பாக நான் அளித்த புகாரில் ஜோதிமணி, செல்வி ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பல மாதங்களாகி விட்டது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இம்மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் காவல் துறையினர் 4 மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+