காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடக் கோரிய மனு- 12ம் தேதி விசாரணை
டெல்லி: தமிழகத்திற்கு கர்நாடகம் 10 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்கு முறைக் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஜூலை 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 25ம் தேதி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அதில், நதிநீர் பங்கீட்டு அடிப்படையில் தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்கு முறை குழுவை அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றனர்.மேலும் வருகிற 12ம் தேதி மனு விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications