Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்ரிநாத்தில் சிக்கியிருக்கும் 900 பேரை மீட்க கடும் முயற்சி

Subscribe to Oneindia Tamil

பத்ரிநாத்: பத்ரிநாத் பகுதியில் இன்னும் 900 பேர் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று மட்டும் பத்ரிநாத்திலிருந்து 1489 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களில் 874 பேர் ஹெலிகாப்டர் மூலமாகவும், 615 பேர் சாலை மார்க்கமாகவும் மீட்டுக் கொண்டு வரப்பட்டனர்.

இன்னும் 300 யாத்ரீகர்கள் மற்றும் 600 உள்ளூர் மக்கள் அங்கு தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான உணவுகளும், மருந்துப் பொருட்களும் போதுமான அளவில் தரப்பட்டிருப்பதாகவும் உத்தரகாண்ட் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Uttarakhand disaster

3000 பேரைக் காணவில்லை

இதற்கிடையே, உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கியவர்களில் 3000 பேரைக் காணவில்லை என்று அரசு்த தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

200 பேர் கொண்ட குழு

இந்த நிலையில் கேதார்நாத் மற்றும் ராம்பாபா பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு துறையினர் அடங்கிய 200 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் பகுகுணா தெரிவித்துள்ளார்.

கேதார்நாத் பகுதியில் மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு குந்தகமாக அங்கு மழை பெய்து வருகிறது. இதனால் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+