தமிழக அரசுக்கு என்.எல்.சி. பங்குகள்.. மத்திய அரசு பரிசீலிக்கும்: நிதி அமைச்சர் ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

Chidambaram
சென்னை: என்.எல்.சி. நிறுவனத்தின் 5% பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி) 5% பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. என்.எல்.சி.பணியாளர்களும் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். இந்நிலையில் ஒரு மாற்று யோசனையாக 5% பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யாமல் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா முன்வைத்திருந்தார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் அவர் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் என்.எல்.சி. பங்குகளை தமிழக அரசுக்கு விற்பனை செய்வது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்கும் என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+