மத்திய அரசின் எரிவாயு விலை கொள்கை..நீங்க கைவிடுங்க... இல்லைன்னா நாங்க மாற்றுவோம்: ஜெ.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மைக்காலமாக மத்திய அரசு எடுக்கும் புதிய கொள்கை முடிவுகள் அனைத்தும் சாமானிய மக்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளது. கடந்த காலங்களில் மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவுகள் அனைத்தும், ஏழை மக்களின் மானியங்களை கட்டுப்படுத்தவும், பெருந்தொழில் நிறுவனங்கள் லாபம் அடைய வழிவகுத்தன.
தற்போது எடுக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு விலை நிர்ணய கொள்கை காரணமாக, 4.2 டாலராக உள்ள இயற்கை எரிவாயுவின் விலை, அடுத்த ஆண்டு முதல் 8.4 டாலராக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மின்சாரம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும். இதனால் இந்த இயற்கை எரிவாயு கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதனை மத்திய அரசு திரும்ப பெறவில்லையெனில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்கு பின்னர் மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும் நிலைய அடையவுள்ள அதிமுக, இக் கொள்கையை மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications