மதுரை விமானி பிரவீண் குடும்பத்தை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்

மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் நேற்று மதுரை காலை மதுரைக்கு வந்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணடைந்த விமானி பிரவீண் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த பிரவீணின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய அவர், பிரவீணின் தாய் மஞ்சுளா மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பொட்டு சுரேஷ் குடும்பத்தினர்....
இதே பகுதியில் தான் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், மு.க.அழகிரியின் நண்பருமான பொட்டு சுரேஷின் வீடு இருக்கிறது. எனவே பிரவீணின் வீட்டில் இருந்து நேராக பொட்டு சுரேஷின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பொட்டு சுரேஷ் பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் போது அவரைச் சந்தித்தார் ஸ்டாலின். ஆனால் பொட்டு சுரேஷ் இறந்து சுமார் 6 மாதமாகியும் அவரது வீடடிற்குச் செல்லும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு அமையவில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக, நேற்று பொட்டு சுரேஷ் வீட்டிற்குக் சென்றிருந்தார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications