மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42.1 அடியாக உயர்வு

கர்நாடக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கான நீர்வரத்து காலை 8 மணி நிலவரப்படி, விநாடிக்கு 33 ஆயிரத்து 419 கனஅடியாக இருக்கிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 6 அடி உயர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து அங்கிருந்து வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. நேற்றை விட 5 ஆயிரம் கன அடி குறைந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 42.1 அடியாக இருக்கிறது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 13.19 டிஎம்சியாக இருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடி வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மின் நிலையத்தில் 4 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications