ஸ்னோடென் அடைக்கல கோரிக்கை நிராகரிப்பு: வெளியுறவு அமைச்சகம்!
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு ஜூன் 30-ந் தேதியன்று எட்வர்ட் ஸ்னோடென் அடைக்கலம் கோரி கடிதம் கொடுத்திருக்கிறார். அவரது கடிதத்தை அரசு கவனமாக பரிசீலித்துப் பார்த்தது. அவருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு எந்த ஒரு காரணம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம் என்றார்.
முன்னதாக புருனேவில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்தியா ஒன்னும் திறந்த வீடு அல்ல காட்டமாக பதில் கூறியிருந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications