ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- 7 போலீசார் பலி!
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 7 போலீசார் பலியாகி உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாகுர் போலீஸ் கண்காணிப்பாளர் அமர்ஜித் பலிஹார் மற்றும் அவருடன் சென்ற போலீசாரை இலக்கு வைத்து மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். தும்கா என்ற இடத்தில் அப்பகுதி டிஐஜி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து விட்டு திரும்பும் போது திடீரென இத்தாக்குதலை மாவோயிஸ்டுகள் மேற்கொண்டனர். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கின்றனர்.
இம்மோதலில் போலீஸ் கண்காணிப்பாளர் அமர்ஜித் பலிஹார் உட்பட 7 போலீசார் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாவோயிஸ்டுகள் தரப்பில் பலியானோர் எண்ணிக்கை வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications