ரவுடி கரிமேடு அன்புவை வியாசர்பாடியில் வைத்துத் தூக்கியது போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வியாசர்பாடியை கலக்கி வந்த ரவுடி கரிமேடு அன்புஎன்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதனால் அன்பு தரப்பினர் என்கவுண்டர் பீதியில் உறைந்துள்ளனராம்.

சென்னையில் பிரலபமான ரவுடிகளை அவ்வப்போது போலீஸார் கைது செய்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது அன்பு தூக்கப்பட்டுள்ளார்.

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த குமரவேல் என்பவர் மகன் அன்பு (30) . கரிமேடு அன்பு என்றும் அழைக்கப்படுவார். இவரை சென்னை செங்குன்றம் அருகே போலீஸார் கைது செய்துளளனர்.

அன்பு, ரவுடி சேரா ராஜேந்திரன் கும்பலைச் சேர்ந்தவர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்னொரு ரவுடியான சோமு என்ற சோமசுந்தரத்தின் கூட்டாளியும் ஆவார்.

2002ம் ஆண்டு செந்தில் என்பவரை கொலை செய்த வழக்கு உள்பட கொலை முயற்சி, ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட வழக்குகள் சோழவரம், பொன்னேரி, எம்.கே.பி.நகர், ராயபுரம், கொடுங்கையூர் காவல் நிலையங்களில் உள்ளன.

அன்பு மீது என்கவுண்டர் பாயுமோ என்ற பீதியில் அவரது தரப்பு கவலையில் உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+