இடிந்ததோ 20... அரசாங்க கணக்கோ ஒண்ணே ஒன்னு: என்னக் கொடுமை சார் இது...?
சென்னை: 2012ல் சென்னையில் 20 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில்,தேசிய குற்ற ஆவணக் காப்பக கணக்கு படியோ, ஒரே ஒரு கட்டிடம் மட்டுமே இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக கணக்கு காட்டப் பட்டுள்ளது.
இது, மாநில குற்ற ஆவணக் காப்பகம் சரியாக தகவல்களைத் தருவதில்லை என்பதையும், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல்களை சரிபார்ப்பதில்லை என்பதையுமே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், தவறான இந்தத் தகவல்கள் மூலம் குற்றவாளிகள் தப்ப நிறைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.

அதிக பலி...
இதுபோலவே, 2011ம் ஆண்டு தென்மாநிலங்களிலேயே அதிக அளவாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி 437 பேர் பலியானார்கள். ஆனால், அவ்வாண்டு வெறும் 21 பேர் மட்டுமே, 22 கட்டிட விபத்துகளில் சிக்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

விதிமுறை மீறல்...
பெரும்பாலும் இத்தகைய கட்டிட இடிபாடு விபத்துகளுக்கு விதி முறைகளைப் பின்பற்றாமல் வீடு கட்டுவதே காரணமாக அமைகிறது.

அலட்சியப் போக்கு...
விதிமுறைகளை மீறிய கட்டிடங்கள் என லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அடையாளம் காணப் பட்டுள்ள நிலையிலும், போதிய நடவடிக்கை எடுக்கப்படாமல் போகும் சிலரது அலட்சியங்களே மேற்கொண்டு விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன.

சரியான விவரங்கள் முக்கியம்...
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் காவல் ஆணையத் தலைவர் பூர்ணாலிங்கம் கூறும்போது, ‘குற்றம் நடை பெறும் போது சரியான விவரங்களைச் சேகரிப்பது மிகவும் முக்கியம்' என தெரிவித்துள்ளார்.

பால்கனி விபத்து...
சில தினங்களுக்கு முன் கூட 4 மாதக் குழந்தையின் தாயான புவனேஸ்வர் என்ற பெண் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானார். மேலும், காயமடைந்த இரு சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications