மலிவு விலை காய்கறி கடைகளில் 10 நாட்களில் ரூ.50 லட்சம் விற்பனை
சென்னை: ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட மலிவு விலை காய்கறி கடைகளில் 10 நாட்களில் 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காய்கறிகள் விலையேற்றத்தை தடுக்க முதல்வர் ஜெயலலிதா பசுமை பண்ணை காற்கறிகள் விற்பனை திட்டத்தை கடந்த 20-ந் தேதி தொடங்கி வைத்தார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 29 இடங்களில் இந்த மலிவு விலை காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் காய்கறிகளை கொள்முதல் செய்து பசுமையாக விற்பனை செய்யப்படுவதால் இத்திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

நேரடி கொள்முதல்
ஊட்டி, கிருஷ்ணகிரி, ஓட்டன் சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் காமதேனு சூப்பர் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து காய்கறி கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

நிரம்பி வழியும் கூட்டம்
காய்கறிகள் பொதுமக்கள் தேவைக்கு போதுமான அளவு வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் காய்கறிகளை தேர்வு செய்து எடுக்கவும் அனுமதிக்கப்படுகிறது. இதனால் மலிவு விலை காய்கறி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இரவு வரை காத்திருந்து காய்கறிகளை வாங்கி செல்வதால் வெளி மார்கெட் காய்கறி கடைகளில் விற்பனை சரிந்தது.

வெளி மார்க்கெட்டில் சரிவு
இதனால் தனியார் காய்கறி கடைக்காரர்களும் மலிவு விலை கடைகளில் விற்கப்படும் விலைக்கே தற்போது விற்பனை செய்கிறார்கள். பீன்ஸ், அவரைக்காய், கத்தரிக்காய் போன்றவற்றின் விலையை திடீரென குறைத்தனர். தனியார் காய்கறி கடைகளில் விலை குறைக்கப்பட்டு இருந்தாலும், ஏழை, நடுத்தர மக்கள் அரசின் காய்கறி கடைகளை நாடிச் செல்கிறார்கள்.

கூடுதல் பில் கவுண்டர்கள்
காய்கறிகள் தட்டுப்பாடு இல்லாமல் பசுமையாகவும், நீண்டநேரம் காத்து நிற்காமல் உடனே வாங்கிச் செல்ல ஏதுவாக அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. காய்கறிகள் வாங்க வருபவர்கள் பில் போடுவதற்கு ரொம்ப நேரம் காத்து நிற்பதை தவிப்பதற்காக கூடுதலாக பில்லிங் கவுண்டர்கள் திறக்கப்படுகின்றன. தற்போது 29 எலக்ட்ரானிக் பில்மெஷின் உள்ளது. மேலும் 19 மெஷின் வாங்கப்படுகிறது.

கூட்ட நெரிசல் இல்லை
மழைக்காலத்தில் பொதுமக்கள் நின்று பொருட்களை வாங்க வசதியாக கூடாரம் அமைக்கப்படுகிறது. ஊழியர்கள் பணியில் சேர்வடையாமல் இருப்பதற்காக மேலும் ஒரு ஷிப்டுக்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கூட்ட நெரிசல் இல்லாமல் காய்கறிகள் வாங்கி செல்ல வசதியாக வெளிபுறங்களில் காய்கறிகள் குவிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெளிமாநில வெங்காயம்
மாலையில் காய்கறிகள் பிரஷாக விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தாமதம் இல்லாமல் காய்கறிகள் கிடைக்க ஒவ்வொரு கடைக்கும் தனித்தனி ஆட்டோ பயன்படுத்தவும் முடிவு செய்யப்படுகிறது. உருளை கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை வெளிமாநிலங்களில் மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.50 லட்சம் விற்பனை
திட்டம் தொடங்கி 10 நாளில் அதாவது 30-ந்தேதி வரை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 492 கிலோ காய்கறிகள் (160 மெட்ரிக் டன்) விற்பனையாகி உள்ளது. மொத்தம் 43 லட்சத்து 25 ஆயிரத்து 369 ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளது. இந்த இரண்டு நாட்களையும் சேர்த்தால் காய்கறிகள் விற்பனை மதிப்பு ரூ.50 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு காய்கறி கடையை திறக்க அரசு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications