புதுச்சேரியில் மீனவர்கள் திடீர் மோதல்.. துப்பாக்கிச்சூடு
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று இரு கிராம மீனவர்களுக்கிடையே பெரும் மோதல் மூண்டது. கலவரத்தைத் தடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருப்பினும் இதில் யாரும் பலியாகவில்லை, காயமடையவும் இல்லை.
புதுவை மாநிலம் வம்பாகீரப்பாளையம் மற்றும் வீராம்பட்டினம் கிராம மக்களுக்கிடையே நேற்று மாலையில் திடீரென மோதல் மூண்டது. இரு தரப்பினரும் கம்பு, கட்டை உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து போலீஸ் அதிகாரிகளும், ஆயுதப்படை போலீஸாரும் விரைந்து சென்று சமரசப்படுத்த முயன்றனர். ஆனால் போலீஸார் மீதே கிராமத்தினர் தாக்க ஆரம்பித்தனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானத்தை நோக்கி 5 சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதையடுத்து பீதியடைந்த கிராமத்து மக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து அங்கு போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அமைதிக் குழு ஏற்படுத்தப்பட்டு பேச்சுவார்த்தைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications