டெல்லியில் மோடியுடன் சு.சுவாமி சந்திப்பு!ஜனதாவை பாஜகவுடன் இணைக்க தயார் என அறிவிப்பு!

டெல்லியில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் பார்லிமென்ட் குழுக் கூட்டத்தில் சட்டசபை தேர்தல்கள் மற்றும் லோக்சபா தேர்தல் வியூகம் வகுக்க மோடி வருகை தந்துள்ளார். இன்று காலை டெல்லி வந்த மோடியை குஜராத் பவனில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திடீரென சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, நான் முன்னாள் ஜன சங்க அமைப்பைச் சேர்ந்த ஜனசங்கி. பாரதிய ஜனதா கட்சி விரும்பினால் அக்கட்சியுடன் நாங்கள் இணைகிறோம். என்னுடைய சித்தாந்தமும் பாஜகவின் சித்தாந்தமும் ஒன்றுதான். இரு கட்சிகளும் இணைய வேண்டும் என பாஜக விரும்பினால் நான் தயாராக இருக்கிறேன்.
நரேந்திர மோடி எனது பழைய நண்பர். அவரது தலைமையை நான் பாராட்டுகிறேன். அவரை 1972ஆம் ஆண்டில் இருந்தே தெரியும். அவர் பாஜக தலைமை ஏற்பதை ஆதரிக்கிறேன். நாங்கள் பழைய நண்பர்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications