For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவாவில் 45 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்த 77 வயது தாத்தா

By Siva
Google Oneindia Tamil News

பனாஜி: கோவாவில் 45 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்த 77 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

கோவா மாநிலம் க்யூபெம் தாலுகாவைச் சேர்ந்தவர் டியோபிலோ மொரேஸ்(77). அவருக்கு அப்பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி அசோல்டா கிராமத்தைச் சேர்ந்த 45 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரது தோட்டத்தில் தேங்காய் பொறுக்க சென்றுள்ளார். அப்போது மொரேஸ் அப்பெண்ணை கற்பழித்துள்ளார்.

இது குறித்து முதலில் மௌனம் காத்த அப்பெண் பிறகு நடந்ததை தனது சகோதரியிடம் தெரிவித்தார். உடனே அவர் கடந்த 2ம் தேதி மொரேஸ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் மொரேஸை கைது செய்தனர்.

நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை போலீசார் 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றனர்.

English summary
A 77-year-old man was arrested for allegedly raping a 45-year-old mentally-challenged woman in Quepem, police said. Teofilo Moraes was held on tuesday for allegedly raping the victim at his farm in Quepem taluka on June 23 where she had gone to collect coconuts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X