நெல்லையில் வயிற்றுப்போக்குக்கு வீட்டு வைத்தியம் ஒத்துக்கொள்ளாமல் 2 வயது பெண் குழந்தை பலி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் வயிற்றுப்போக்கிற்கு அளவுக்கு அதிகமாக வீட்டு வைத்திய மருந்தை கொடுத்ததால் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையை அதன் தாய் அருகில் உள்ள சித்தா மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவர் குழந்தையை பரிசோதித்துவிட்டு அதற்கு கற்பூரம் மற்றும் மிளகுத்தூளை தேனில் கலந்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.

அந்த பெண் மருத்துவர் கூறிய அளவை விட அதிகமாக அந்த பொடியை தேனில் கலந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் குழந்தையின் உடல் நலம் மோசமானது. உடனே குழந்தையை பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர் அதற்கு கொடுக்கப்பட்ட மருந்து விஷமாக மாறியதாகக் கூறி சிகிச்சை அளித்தார்.

ஆனால் குழந்தை சிகிச்சை பலன் இன்றி இன்று பரிதாபமாக உயிர் இழந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+