1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி… ஜூலை 10 முதல் கர்நாடகாவில் அமல்
பெங்களூர்: தமிழ்நாட்டைப் போல கர்நாடகாவிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 1ரூபாய்க்கு 1 கிலோ அரிசி என 30 கிலோ அரிசி வழங்கும் திட்டம் ஜூலை 10 தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 30 கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஜூலை 10ம் தேதி இந்த திட்டத்தை முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார்.
மத்திய அரசிடம் இருந்து மாதந்தோறும் கர்நாடக அரசு 1,78000 டன் அரிசியை பெறுகிறது. இந்த திட்டத்தின் படி கூடுதலாக 1,07,000 டன் பெறப்படும் என்று குடிமைப் பொருள் நுகர்வோர்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
வறுமையில் வாடுபவர்களுக்கு இது ஒரு ஆதரவைத் தரும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு 10 கிலோ அரிசியும், இரண்டு பேருக்கு 20 கிலோ அரிசியும், மூன்றும் அதற்கு மேற்பட்ட குடும்பத்தினருக்கு 30கிலோ அரிசியும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications