ஜெ. குறித்து அவதூறு பேச்சு: பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம்சுருதி கைது!

Subscribe to Oneindia Tamil

Paruthi Elamvazhuthi Son’s Arrest
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக பரிதி இளம் வழுதி மகன் பரிதி இளம் சுருதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த பரிதி இளம்வழுதி. இவரது மகன் பரிதி இளம்சுருதி,வட சென்னை திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார்.

கடந்த 1 ஆம் தேதியன்று சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கலந்துகொண்டு பேசிய பரிதி இளம்சுருதி மீது முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரை இன்று கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஜூன் 28ம் தேதி திமுகவில் இருந்து விலகிய பரிதி இளம் வழுதி அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் திமுகவில் நீடிக்கும் பரிதி இளம் வழுதியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+