பசில் ராஜபக்சேவுடன் தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு! பேச்சுக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி!

Subscribe to Oneindia Tamil

Basil rajapksa
டெல்லி: இந்தியா வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும் அந்நாட்டு அமைச்சருமான பசில் ராஜபக்சேவை தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

டெல்லிக்கு மூன்று நாள்கள் அரசு முறைப் பயணமாக பசில் ராஜபகசே கடந்த வியாழக்கிழமை வந்தார். அவரை தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் எஸ். வேணுகோபால், ஆலோசகர் என். தேவதாஸ், இலங்கை-இந்திய மீனவர் கூட்டமைப்பின் அமைப்பாளர் எஸ்.பி. அந்தோனிமுத்து, ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கத் தலைவர் ஏ. அல்போன்ஸ், செயலர் பி. ஜேசுராஜா, ராமேசுவரம் மாவட்ட மீனவர் சங்கச் செயலர் எம். சந்தியாஹு ஆகியோர் நேற்று காலை சந்தித்துப் பேசினர்.

இச்சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க ஆலோசகர் தேவதாஸ், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இது தொடர்பாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோருடன் பேச்சு நடத்த ஏற்பாடு செய்வதாக பசில் ராஜபக்சே உறுதியளித்துள்ளார். இதையே சிறந்த முன்னேற்றமாகக் கருதுகிறோம் என்றார்.

தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் நேற்று மாலை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்துப் பேசினர். இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோரை சந்தித்துப் பேச உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+