புத்தகயா தாக்குதல்: மகாபோதி கோவில், புத்தர் சிலை பத்திரமாக உள்ளது: உள்துறை செயலாளர்
டெல்லி: இன்று காலை நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் மகாபோதி கோவில் வளாகத்திற்கும், அங்குள்ள புத்தரின் சிலைக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அனில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மகாபோதி கோவிலுக்கு உள்ளும், வெளியேயும் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் தீவிரவாதிகளின் வேலை. இந்த தாக்குதலில் மகாபோதி கோவில் வளாகத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. மேலும் அங்குள்ள புத்தரின் சிலை பாதுகாப்பாக உள்ளது. இது தவிர புத்த மடத்திற்கும் சேதம் ஏற்படவில்லை.
இன்று காலை 5.30 மணி முதல் 6 மணி வரை கோவில் வளாகம் மற்றும் போதி மரத்திற்கு அருகே தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. 4 குண்டுகள் கோவில் வளாகத்திற்குள்ளும், 3 குண்டுகள் புத்த மட வளாகத்திலும், ஒரு குண்டு புத்தர் சிலைக்கு அருகிலும் வெடித்தன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
தேசிய புலனாய்வு நிறுவனம் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications