ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கு: திமுக நிர்வாகி காரல் மார்க்ஸுக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக மகளிரணி நிர்வாகி காரல் மார்க்ஸுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
திமுக மகளிர் தொண்டரணி செயலாளராக இருப்பவர் தஞ்சையைச் சேர்ந்த காரல் மார்க்ஸ். இவர் சென்னையில் நடைபெற்ற கழக பேச்சாளர்கள் கூட்டத்தின்போது முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகக் கூறி அவரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் புழல் சிறைக்கு நேரில் சென்று காரல் மார்க்ஸை சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் காரல் மார்ஸுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications