அவதூறு வழக்கில் ஆஜராக விஜயகாந்த்துக்கு விலக்கு! ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Defamation case: Court comes to Vijayakanth’s relief
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக பேசியதாக திருப்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ஆஜராக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்துக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது திருப்பூர் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், சட்டவிரோதமாக தன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்க அளிக்க வேண்டும் என்றும் விஜயகாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள், தனபாலன், செல்வம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று (8ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது, அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக விஜயகாந்த்துக்கு விலக்கு அளித்த நீதிபதிகள், இது தொடர்பாக பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+