சேது சமுத்திர போராட்டத்தில் 'கிழவனும், மாங்கொட்டையும்' கதை சொன்ன கருணாநிதி

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நாகையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கருணாநிதி பேசியதாவது,
சேது சமுத்திர திட்டத்தால் எனக்கோ, தம்பி திருமாவளவனுக்கோ இல்லை இங்கிருக்கும் உடன் பிறப்புகளுக்கோ தனிப்பட்ட முறையில் ஏதேனும் உண்டா என்றால் இல்லை. நம் எதிர்காலத்தை மனதில் வைத்து இத்திட்டத்தை நிறைவேற்றக் கோருகிறோம். எதிர்காலம் என்றால் எனக்கு 90 வயது ஆகிறது. 90 வயதிற்கு பிறகும் நம்முடைய வருங்கால சமுதாயம் வாழ நான் கனவு காண வேண்டாமா? இல்லை காண்பது தவறா?
பிள்ளை பருவத்தில் படித்தது நினைவில் இல்லையா? தோட்டத்தில் ஒரு கிழவன் ஒரு மாங்கொட்டையை விதைக்கிறான். அப்போது அருகில் இருந்தவர் ஒருவர் என்ன தாத்தா மாங்கொட்டையை விதைக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த கிழவன் இது செடியாகி, மரமாகும். அதனால் தான் புதைக்கிறேன் என்றார்.
அதற்கு அந்த நபரோ, இது எப்பொது செடியாவது, எப்பொழுது மரமாவது, எப்பொழுது பலன் பெறுவது என்று வேடிக்கையாக கேட்டார். அதற்கு அந்த பெரியவர் கூறுகையில், என் பாட்டன் பூட்டன் புதைத்த மாங்கொட்டைகள் தான் இன்று மரமாகி பூத்துக்குலுங்கி காய்க்கிறது. அதை நான் பறித்து சாப்பிடுகிறேன். நீயும் பறித்து சாப்பிடுகிறாய். அதே போன்று நான் புதைத்துள்ள மாங்கொட்டை எதிர்கால சந்ததியினருக்கு பலன் தரும் என்றார்.
அதே போன்று எனக்கு வயதானாலும், கழகத்தில் உள்ளவர்களுக்கு வயதானாலும் இன்றைக்கு நாம் போராடும் இந்த திட்டம் வருங்கால சந்ததிக்கு பலன் தரும் என்றார் கருணாநிதி.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications