என்.எல்.சி.யின் பங்குகளை தமிழகத்திற்கு விற்க செபி பரிந்துரை

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசனின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. இதற்கு தொழிலாளர்களும், தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு 5 சதவீத பங்கை விற்பனை செய்யும் முடிவில் முனைப்பாக இருந்தால், தமிழ் நாட்டிற்கே தரலாம் என ஜெயலலிதா கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்.
இதுகுறித்து இன்றும் 3வது முறையாக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதாக இருந்தால், தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் டிட்கோ, சிப்காட், டிக் போன்ற ஏதேனும் ஒரு நிறுவனத்துக்கு விற்பனை செய்யலாம் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஜெயலலிதாவின் கோரிக்கை குறித்து, மத்திய அரசு, செபி அமைப்பிடம் தெரிவித்தது.இந்நிலையில், ஜெயலலிதா கோரிக்கை குறித்து பங்கு விற்பனை துறைக்கு செபி அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அதில், 'என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறைக்கு விற்பனை செய்யலாம்' என செபி பரிந்துரைத்துள்ளது.
என்.எல்.சி. 5 சதவீத பங்கை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என அதன் தொழிலாளர்கள் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications