வினோதினி வழக்கு: குற்றவாளியிடம் 115 கேள்வி கேட்ட நீதிபதி

காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி திருவேட்டக்குடியைச் சேர்ந்தவர் அப்பு என்கிற சுரேஷ் (28). இவர் எம்எம்ஜி நகரில் வசித்து வந்த இன்ஜினியர் வினோதினியை ஒரு தலையாக காதலித்தார்.
அவரது காதலை ஏற்க வினோதினி மறுத்துவிட்டதால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் மீது ஆசிட் வீசினார் சுரேஷ். இதில் படுகாயமடைந்த வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பான வழக்கு காரைக்கால் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே 24 சாட்சிகளிடம் நடத்திய விசாரணையிலிருந்து, 115 கேள்விகளை சுரேசிடம் நீதிபதி வைத்தியநாதன் கேட்டார். இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு சுரேஷ் மறுப்பு தெரிவித்தார். இதன் அடுத்த கட்ட விசாரணையை வரும் 17ம்தேதி நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் காரைக்கால் நகராட்சி ஆணையர் ஆஜராகி சம்பவம் நடந்ததாக கூறப்படும் பகுதியின் லேஅவுட் சமர்ப்பிப்பது குறித்து பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications