பேத்தியிடம் அசிங்கமாக நடந்து தற்கொலைக்குக் காரணமான 60 வயது கோதண்டம்

Subscribe to Oneindia Tamil

ஆரணி: பேத்தியிடம் தவறாக நடந்து கொண்டும், அவருக்கு முன்பாக ஆடைகளைக் கழற்றிப் போட்டு அசிங்கமாக நடந்து கொண்டு அவரது தற்கொலைக்குக் காரணமான தாத்தாவைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆரணியைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவரது மகள் ஜான்சி ராணி. இவரது கணவர் பெயர் துளசிராமன். திருமணத்திற்குப் பின்னர் தனது கணவருடன் தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார் ஜான்சி ராணி.

இவர்களுக்கு எதிர் வீட்டில்தான் கஸ்தூரியின் சித்தப்பா கோதண்டம் வசித்து வருகிறார். 60 வயதான இவர் ஜான்சி ராணி முன்பு அடிக்கடி அசிங்கமாக நடந்து கொள்வாராம். டிரஸ்ஸைக் கழற்றிப் போட்டு விட்டு நடமாடுவது, சீண்டுவது, ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்துவது என நடந்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த ஜான்சி ராணி, தீக்குளித்து விட்டார்.

உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கோதண்டத்தைத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+