எந்தக் 'கேஸ்' போட்டாலும் பயப்பட மாட்டேன்.. விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil

ரிஷிவந்தியம் தொகுதிக்கு வந்திருந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனைக் கண்டு அஞ்சப்போவதில்லை. சட்டப்படி சந்திப்பேன்.
இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. மக்களின் அடிப்படை பிரச்னைகளை போக்குவதற்கு அரசு எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை.
தேர்தலை மையப்படுத்தியே உணவுப் பாதுகாப்பு திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. டாஸ்மாக் கடை நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக தண்ணீரை இன்று காசுக்காக விற்பனை செய்கிறார்கள்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ரூபத்திலாவது ஆட்சி மாற்றம் நடந்தே தீரும். அதன் அடிப்படையில் தமிழகத்திலும் ஒரு மாற்றம் ஏற்படும். இது உறுதி என்றார் அவர்.












Click it and Unblock the Notifications