ராஜிவ் கொலை மறுவிசாரணை.. பதிலளிக்க அவகாசம் கோரும் மத்திய அரசு!
Subscribe to Oneindia Tamil
மதுரை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை மறு விசாரணை நடத்தக் கோரும் வழக்கில் பதிலளிக்க மத்திய அரசு கால அவகாசம் கோரியதால் வழக்கு 27-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கறிஞர் சாந்தகுமரேசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வரும் 27-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications