For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐயய்யோ அரெஸ்ட்டா.. ரிஷிவந்தியத்திலிருந்து தலைமறைவான விஜயகாந்த்

Google Oneindia Tamil News

Vijayakanth aborts his Rishivandhiyam visit midway
ரிஷிவந்தியம் தனது தொகுதிக்கு வந்திருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்து தொகுதியிலிருந்து வேகமாக புறப்பட்டுப் போய் விட்டார்.

கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக அவர் கிளம்பிப் போய் விட்டதாக நம்பப்படுகிறது.

ரிஷிவந்தியம் தொகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார் விஜயகாந்த். பல்வேறு திறப்பு விழாக்கள், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

இதையடுத்து அதிகாரிகளைச் சந்தித்து தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அவர் விவாதிப்பதாக இருந்தது. இந்தநிலையில்தான் அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்ட தகவல் தொகுதியில் பரவியது.

இந்த நேரம் பார்த்து விஜயகாந்த்துக்கும் எங்கிருந்தோ ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய விஜயகாந்த் முகம் சீரியஸாக மாறியது. இதையடுத்து போனைப் பேசி முடித்த விஜயகாந்த், அவசரமாக கிளம்பினார்.

கொலை முயற்சி வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்ற தகவல் கிடைத்ததால்தான் விஜயகாந்த் வேகமாக புறப்பட்டுப் போய் விட்டதாக கூறப்படுகிறது.

English summary
After hearing an attempt to murder case against him DMDK leader Vijayakanth aborted his Rishivandhiyam visit midway and left the town.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X