For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி.யில் 1 வயது பெண் குழந்தையை கற்பழித்த காமக்கொடூரன் கைது: குழந்தை மருத்துவமனையில் அனுமதி

By Siva
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 1 வயது பெண் குழந்தையை கற்பழித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதே மாநிலம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 3 பேரால் கற்பழிக்கப்பட்ட பிரதாப்கர் சிறுமி வரும் 24ம் தேதி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கவிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது நாக்கை யாரோ துண்டித்துவிட்டனர். மேலும் இடாவா மாவட்டத்தில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் 1 வயது பெண் குழந்தையை ஒருவர் கற்பழித்த கொடூரம் நேற்று நடந்துள்ளது. அந்த குழந்தையை கற்பழித்தவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு குழந்தையின் நிலைமை மோசமானதால் அதை சிகிச்சைக்காக மீருட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அமெரிக்காவில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A man was arrested for raping a one-year old baby girl in Uttar Pradesh's Bulandshahar district on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X