மறு பிரேதப் பரிசோதனையில் இளவரசன் உடலுக்குப் பதில் வேறு உடலை வைக்க சதி.. தந்தை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து தனது சொந்த ஊரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இளவரசன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை மதிக்கிறேன். அதுபோல் மறு பிரேத பரிசோதனை நடைபெறட்டும்.
ஆனால் நேற்று போலீசார் தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து என்னை அப்புறப்படுத்தி விட்டனர். இதனால் எனது மகன் உடலுக்கு பதிலாக வேறு உடலை வைத்து தடயங்களை அழிக்க போலீசார் முயற்சி செய்யலாம். இதனால் தான் என்னை அப்புறப்படுத்தினார்களோ என்று நான் சந்தேகப்படுகிறேன்.
அதனால் நான் திரும்ப வந்து இது என் மகன் உடல்தான் என்று சொன்னபிறகு தான் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications